பெரும்பான்மையான தாவரங்கள் பூமிக்கு மேல்தான் பூ பூத்து காய்க்கின்றன. பூமிக்கடியில் பூத்து காய்க்கும் 171 வகை தாவரங்கள் உள்ளன. தென்கிழக்கு ஆசியாவிலுள்ள போர்னியோ தீவில் பிரதானமாக பூமிக்கடியில் பூத்து காய்க்கும் ஒரு வகை பனை தாவரத்தை லண்டனிலுள்ள ராயல் பொட்டானிக்கல் கார்டன் அறிவிய லாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் காய்க்கும் நல்ல சிவப்பு நிற பழங்கள் இனிப்பாகவும் சாறுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தீவில் இதுவரை 300 வகை பனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகில் இதுவரை 2500 வகை பனை மரங்கள் அறியப்பட்டுள்ளன.